திருகோணமலையில் நிலவும் காணி பிரட்சனைகள் தொடர்பாக ஆராயும் நோக்கில் திருகோணமலை ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபுக்கும் அமைச்சர் கயந்த கருனாதிலக்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
பல வருடங்களாக குடியிருக்கும் காணிகளுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படாமை , பொதுமக்களின் விவசாயக் காணிகளில் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது வன பரிபாலன சபையினால் விதிக்கப்படும் கட்டுபாடுகள், வியாபார நோக்கங்களுக்காக பொதுமக்களின் தனியார் காணிகளை அரசியல்வாதிகளின் உதவியுடன் கைப்பற்றல், முப்படையினரின் கட்டுபாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்தல் அல்லது அவர்களுக்கு மாற்று காணிகள் வழங்குதல் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இப்பிரட்சனைகளை ஆராய்ந்து தீர்க்கக்கூடிய பிரட்சனைகளுக்காண நிரந்தர தீர்வுகளை பெற்று தருவதாகவும் முப்படையினரின் கட்டுபாட்டில் உள்ள தனியார் காணிகளின் பிரட்சனைகள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுடன் ஆலோசனை செய்வதாகவும் இதன்போது அமைச்சர் உறுதியளித்தார்.


No comments:
Post a Comment